0:00 / 05:18
திருவனந்தபுரம் : நம்ம நஸ்ரியாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு சமீபத்தில் நஸ்ரியா ஒரு வேலையைச் செய்திருக்கிறார். நாட்டையே திருத்தற வேலை அப்படின்னு யாரும் தப்பா நினைச்சிடாதிங்க, நஸ்ரியா போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருந்திருக்காங்க. இந்த பகத் பாசில் சும்மா இல்லாம ஒரு காரை வாங்கி தன்னோட அன்புப் பரிசா நஸ்ரியாவுக்கு கொடுக்க அந்தக் கார வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாம தன்னோட உறவினர்களைப் போய்பார்த்துட்டு வந்திருக்காங்க நஸ்ரியா.
எல்லாம் நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சி, திரும்ப வர்றப்ப கொச்சினுக்கு ஒரு நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில ஒரே டிராபிக்கா இருந்திருக்கு. இதனால பொண்ணு காரை நத்தை வேகத்தில ஓட்டிட்டு வந்திருக்கு, தீடிர்னு யாரோ ஒரு புண்ணியவான் நஸ்ரியாவோட காரை லேசா உரசிட ஆரம்பிச்சது கிரகம் அந்தக் காரை உரசினவருக்கு.

பூவிற்குள் ஒரு புயல்..........